Sunday, May 22, 2011

Mr. Karunanidhi - Former Chief minister

Mr. Karunanidhi,
Your answers are questioned.....

1949ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி வைத்து, அண்ணா என்ன பேசினார் என்பது நினைவிருக்கிறதா கருணாநிதி அவர்களே… ? நீங்கள் மறந்திருப்பீர்கள்.
“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதயில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்றேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், போருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திமுகவின் கோட்பாடுகளாகும்.”
இந்தக் கொள்கைகளையெல்லாம் நீங்கள் என்றோ குழிதோண்டிப் புதைத்து விட்டீர்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு, தந்திரமாக, நெடுஞ்செழியனுக்கு போக வேண்டிய கட்சித் தலைவர் பதவியை எம்ஜிஆர் உதவியோடு, தட்டிப் பறித்து விட்டு, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீங்கியவர் நீங்கள்.
annadurai_mgr_karunanidhi
திமுக என்பது எத்தனை தியாகங்களால் உருவானது ? அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை நூலுக்குத் தடை, திமுக கூட்டங்களுக்கு 144 தடை உத்தரவு, மீறி நடந்த குன்றத்தூர் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, என்று தொடங்கிய காலம் முதலாகவே எத்தனை தடைகள் ? அடக்குமுறைகள் ? ஆனால், இந்த அடக்குமுறைகள் அத்தனைனையும் மீறி, திமுக வளர்ந்ததற்காக காரணம், காலத்தின் தேவை. திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு கட்சியின் அவசியத்தை அன்று மக்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், அதே திராவிட முன்னேற்றக் கழகம் இன்று, இன்றோ நாளையோ அவிழும் நெல்லிக்காய் மூட்டை போன்ற நிலைக்கு ஆளாக்கியது நீங்கள் தான்.
நீங்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, நீங்கள் சம்பந்தப் படாத அத்தனை விவகாரங்களையும் கல்லறைக்கு அனுப்பினீர்கள். அண்ணாவால் தொடங்கப் பட்ட திராவிட நாடு இதழ் எங்கே ? கழக செய்திகளைத் தாங்கி வந்த மாலை மணி இதழ் எங்கே ? அந்த இதழ்கள் அத்தனையையும் ஓரங்கட்டி விட்டு, நீங்கள் தொடங்கியது என்ற ஒரே காரணத்துக்காக முரசொலியை கட்சியின் அதிகார பூர்வ ஏடாக ஆக்கியது உங்கள் அகந்தையும் சுயநலமும் அல்லாமல் வேறு என்ன ?
அந்த முரசொலியை திமுகவுக்கு வழங்கியதற்காக நீங்கள் செய்த தந்திரம் என்ன ? போதுமான நிதி இல்லாததால் இனி முரசொலியை நடத்த முடியாது என்று அறிவிப்பு வெளியிட்டு, ஒரு வாரத்திற்கு அந்த ஏட்டை நிறுத்தி, கோடானு கோடி தொண்டர்கள் ‘தலைவா, இதழைத் தொடங்கு தலைவா’ என்று கடிதமும் தந்தியும் அனுப்பியதும், அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று, நீங்கள் தொடங்கிய இதழ் என்பதால், திமுகவுக்கு அந்த இதழை விற்க, 2 கோடியை திமுகவிடமிருந்தே பெற்ற அற்ப மனிதர் தானே நீங்கள் ?
இப்படி ஆரம்பம் முதலாகவே, சுயநலம், சுயநலம் என்று சுயநலத்தின் மொத்த உருவமாகத்தானே இருந்தீர்கள். ? இன்று இப்படி ஒரு மோசமான சூழலில் சிக்கி, அவமானப்பட நேர்ந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல கருணாநிதி அவர்களே.. நீங்களே தான்.
5293940480_b22319fe71_b
பதவியையும் அதிகாரத்தையும் உங்கள் மகனுக்காக கூட விட்டுத் தரத் தயாராக இல்லை நீங்கள். அந்த அகந்தையே உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. எண்பத்து ஏழு வயது வரை ஓயாமல் உழைப்பதும், படிப்பதும், எழுதுவதும், நல்ல விஷயம் என்றாலும் கூட, உழைப்பதற்கு வேறு நபர்கள் இருக்கும் போது, அதுவும் உங்கள் சொந்த வாரிசாக இருக்கும் போது, அவருக்குக் கூட விட்டுத் தராமல், தொடர்ந்து தள்ளுவண்டியிலும் அதிகாரத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பது உங்களின் பிடிவாதம் மற்றும் அதிகார வெறி காரணமாகவே… இது போல தள்ளுவண்டியில் அமர்ந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு, பேச்சு வார்த்தை நடத்தினால் உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இலக்கியப் பணி ஆற்றப் போகிறேன் என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள் ? வசதியாக அதை மறந்து விட்டு, ஆறாவது முறையாக முதல்வராகப் போகிறேன் என்று கூசாமல் பேசினால், ஊர் சிரிக்காது ?
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தொடங்கப் பட்ட திமுகவை, உங்களின் மூட நம்பிக்கைகளினாலும், திருட்டுத் தனத்தாலும், சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் போடுவது வரை கேவலப்படுத்தி விட்டீர்கள். திமுக வரலாற்றில் என்றாவது ஒரு சாமியாருக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது உண்டா ? வாயைத் திறந்தால், அறிஞர் அண்ணாவின் வழியில், பெரியாரின் நிழலில் என்று ஜிகர்தண்டா கதைகளாக விடுகிறீர்களே… அண்ணாவும் பெரியாரும், இப்படியா தீர்மானம் போட உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ?
உங்கள் துறையைச் நேர்ந்த அமைச்சர் தீமிதித்தார் என்பதற்காக, தீமிதிப்பது காட்டுமிராண்டிச் செயல் என்று சொல்லி, அந்தியூர் செல்வராஜ் என்ற அமைச்சரை ஓரங்கட்டவில்லை ? உங்கள் மனைவி காற்றிலிருந்து மோதிரம் எடுக்கும் போலிச் சாமியார் சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், உங்கள் அருமைப் பிள்ளை சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், பிறந்த நாளுக்கு ஆசி வாங்க புட்டபர்த்தி சென்ற போதும் அது காட்டுமிராண்டித்தனமாக செயலாக உங்களுக்குப் படவில்லையா ?
Jan_20_f
ஊர் ஊராக நாத்திகம் பிரச்சாரம் செய்த, பெரியாரும், அண்ணாவும் உங்களுக்கு இதையா கற்றுக் கொடுத்தார்கள் ?
மிகப் பெரிய தானைத் தலைவராக, டெல்லியை அசைத்த உங்களை நம்பாமல், உங்கள் மகளே தனக்கும், ராசாவுக்கும் மந்திரிப் பதவி வேண்டும் என்று ஒரு தரகரோடு உரையாடிய விபரங்கள் வெளியாகி ஒரு வருடம் ஆகிறதே…. ?
niira_radia_20110110
ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்திருந்தால், அப்போதே அல்லவா கனிமொழியை கட்சியை விட்டு விலக்கி வைத்திருக்க வேண்டும் ? அப்போது விலக்கி வைத்திருந்தால், இன்று இத்தனை சிக்கல்கள் சமாளிக்க முடியாதது போல் உருவாகியிருக்காதே ? இரண்டு பெண்மணிகள் பேசுவதில் என்ன தவறு என்றல்லவா சப்பைக் கட்டு கட்டினீர்கள் ?
kAHNIKOZIfile_20101215
பேராசைக்கு ஓர் அளவில்லையா கருணாநிதி அவர்களே ? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்குவதற்கு முன்பாக, உங்கள் குடும்பத்திடம் பணம் இல்லையா ? சொத்து இல்லையா ? என்று நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆனீர்களோ, அன்று முதல், நீங்கள் ஊழல் புரிந்து வந்துள்ளீர்கள் என்பதை நீதிபதி சர்க்கரியாவின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. பணம் பண்ணுவதையே முழு நேரத் தொழிலாகவும், ஆட்சி புரிவதையும் கட்சி நடத்துவதையும் அதற்காக வழியாகவும் கடைபிடித்தவர் நீங்கள். அத்தனை பணம் வைத்திருந்தும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எதற்காக இத்தனை பேராசை கருணாநிதி ? எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தவர் நீங்கள் ? எத்தனை விசாரணைகளை சந்தித்திருப்பீர்கள் ? ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான முதல் நாளே ஆயிரம் கோடியை உங்களிடம் வந்து கொடுத்த போது, நீங்கள் உஷாராயிருக்க வேண்டாமா ? இப்படி ஆயிரம் ஆயிரம் கோடிகளாக பணம் வந்து கொட்டினால், இதில் பின்னாளில் சிக்கல் வரும் என்பதை உணர்ந்திருக்க வேண்டாமா ? பேராசைப் பிடித்த உலகில், மிகப் பெரிய ஆதாயத்தை அடையாமல் ஆயிரக்கணக்கான கோடிகளை எவனும் தர மாட்டான் என்பது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டாமா ? மற்ற ஊழல்களைப் புரிந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும், ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று உங்களை யாருமே அசைத்திருக்க முடியாதே ?
rajaairport
தமிழ்நாட்டில் ஊழல் புரிந்திருந்தால், பதவி போகும் வரை உங்கள் ஆட்சி என்பதால், தடயத்தையாவது அழித்திருக்க முடியும். வட இந்தியாவில், டெல்லியில், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு இடத்தில் இப்படி ஒரு இமாலய ஊழலைச் செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று எப்படி நம்பினீர்கள் ?
நீங்கள் வளர்த்து ஆளாக்கிய உங்கள் அருமைப் பேரப்பிள்ளைகள் உங்களுக்கு எதிராக திரும்பிய போது, அவசர அவசரமாக கலைஞர் டிவியை தொடங்க வேண்டும் என்று விரும்பினீர்கள். விருப்பம் சரி. அவ்வாறு தொடங்கப் பட்ட டிவிக்கு இயக்குநராக, கட்சியில் எந்த நாயையாவது போட்டிருக்கலாமே ? உங்களை மீறி யாராவது செயல்பட முடியுமா ? அதையும் மீறி செயல்பட்டால் விட்டு விடுவீர்களா ? அதிகபட்சம் அந்த நபர் 10 ரூபாயை கையாடுவான். அவ்வளவு தானே ? உலகத்தில் யாராவது பெண்டாட்டியையும், பெண்ணையும் இயக்குநராக போட்டு, லஞ்சப் பணத்தில் டிவியை தொடங்குவார்களா ?
ss
உங்கள் கீழ் செயல்படும் துறையான லஞ்ச ஒழிப்புத் துறையில் போடப்படும் வழக்குகளில், மனைவி பெயரில் சொத்துக்கள் இருந்தால், குற்றவாளிக்கு உடந்தை என்ற, மனைவியையும் குற்றவாளியாக சேர்ப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கு மறந்து விட்டது ?
அப்படி இருக்கும் போது, யாராவது ஒரு குப்பனையோ, சுப்பனையோ, கலைஞர் டிவியில் இயக்குநராகப் போட்டிருக்கலாமே ? அதாவது பத்து பைசா கூட வேறு யாருக்கும் போகக் கூடாது. அந்த பத்து பைசாவையும் குடும்பம் தான் தின்ன வேண்டும். ஏன் கருணாநிதி உங்களுக்கு இப்படி ஒரு பேராசை ?
கடன் வாங்கினார்கள், திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்று நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பினீர்களே…. ராசா கைது செய்யப் பட்டதும் திருப்பிக் கொடுக்கப் பட்டால், இப்போது ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள் என்று சிபிஐ கேட்காது என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் ? கலைஞர் டிவியின் நிகர லாபமே, 1.34 கோடியாக இருக்கும் போது, 200 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று சிபிஐ கேட்காதா ? சிபிஐ அதிகாரிகள் அவ்வளவு முட்டாள்களா ?
ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியதும், இந்த இமாலய ஊழலை மறைக்க நீங்கள் எடுத்த முயற்சி மிக மிக கேவலமானது கருணாநிதி அவர்களே… ராசா தலித் என்பதால் வட இந்திய ஊடகங்களும், பார்ப்பன சக்திகளும் ராசாவை குற்றம் சொல்லுகின்றன என்பது எத்தனை அபத்தமான வாதம் ? அபத்தமானது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. இந்த ஊழலில் சாதி இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா ? தலித்தாகிய ராசா வாங்கித் தந்த பணத்தை, இசை வேளாளராகிய தயாளு அம்மாள், நாடார்களாகிய ராசாத்தி கனிமொழி, ரெட்டியாராகிய நக்கீரன் காமராஜ், இஸ்லாமியராகிய ஜாபர் சேட், தேவராகிய டி.ஆர்.பாலு, நாயுடுவாகிய ஆற்காடு வீராச்சாமி, கிறித்துவரான ஜெகத் கஸ்பர், என சாதி மதப்பாகுபாடு இல்லாமல் தானே அனைவரும் பங்கு போட்டுக் கொண்டீர்கள் ? இதில் சாதி எங்கிருந்து வந்தது ? மேலும், உங்களின் பசப்பு வார்த்தைகளை நம்புவதை மக்கள் எப்போதோ நிறுத்தி விட்டார்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை ?
l2007121916124
நீங்கள் கோலோச்சும் அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போதே நீங்கள் பதவி விலகியிருக்க வேண்டும் கருணாநிதி. இதை விட உங்களுக்கு பெரிய அவமானம் என்ன வேண்டும் ? உங்கள் மகளையும், மனைவியையும், சிபிஐ உங்கள் மூக்குக்கு கீழே கேள்வி கேட்டுச் செல்கிறார்கள் இதற்குப் பிறகும் வெட்கமில்லாமல், கலைஞர் டிவியில் தவறே நடக்கவில்லை என்று சொல்லுவதன் மூலம், தப்பித்து விடலாம் என்று எப்படி தப்புக் கணக்கு போட்டீர்கள் ?
Kanimozhi-_20110223
கனிமொழி பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றதும், உடனடியாக திமுவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டினீர்களே… கனிமொழி உங்கள் மகள் என்பதை விட, திமுகவில் அப்படி என்ன பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் ? உங்கள் மகள் ஊரான் பணத்தை திருடினால், கேள்வி கேட்க மாட்டார்களா ? விசாரிக்க மாட்டார்களா ? உங்கள் மகளை குற்றம் சாட்டி விட்டார்கள் என்பதற்கும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் பெண்டாட்டி, பிள்ளை, மகளுக்காகத் தான் திமுக இருக்கிறதா ? அந்தக் கூட்டத்தில் இயற்றிய தீர்மானத்திலும், ஏதாவது உப்பு சப்பு இருந்ததா ? யாரையாவது கண்டித்தீர்களா ? ‘சரத்குமார் மற்றும் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பது, ஆச்சயர்யத்தை அளிக்கிறது’ என்றால் என்ன ஆச்சர்யம் இதில் உங்களுக்கு ? காலில் விழுந்து கெஞ்சிக் கதறியும், மாட்டி விட்டு விட்டார்களே என்றா ? திமுகவின் தீர்மானங்கள் எப்படி இருக்கும் தெரியுமா ? மறந்திருப்பீர்கள். நினைவு படுத்துகிறேன்.
1957ம் ஆண்டு, நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று இயற்றப் பட்ட தீர்மானம்.
“பாராளும் பண்டிதரின் ஆணவம் - எதற்கும் எவரையும் நான்சென்ஸ் என்றும், அறிவும் அனுபவமும் மிக்க தலைவர்களைப் பித்தர்கள் என்றும், மூதறிஞர்களை ஆற்றல் மிக்கோரை முட்டாள்கள் என்றும், இன எழுச்சி ஊட்டுவோரை கட்டு மிராண்டிகள் என்றும், தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றிடும் பெரியார் ஈவெராவை மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு ஓடச் சொல்லும்படியும் பேசும் பண்டித நேரு – பஞ்சம் பேக்கினாரா ? பட்டினி துடைத்தாரா ? விலை ஏற்றம் போக்கினாரா ? செல்வம் வளரச் செய்தாரா ? எதைச் சாதித்துத் தந்தார் இந்நாட்டு மக்களுக்கு ?
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி எல்லாத் தலைவர்களையும் ஏசித் தமிழரின் மனம் புண்படச் செய்யும் பண்டித நேரு பவனி வருகிறார்.
பம்பாய் போல் பயங்கரம் வேண்டாம். குஜராத் போல் கலகம் வேண்டாம். கண்ணியமான முறையில் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டாமா நாம் ? தமிழர்களே… ! உங்கள் நாடு சீரியது. உமது வரலாறு புகழ்மிக்கது. உமது தலைவர்கள் ஆற்றல் மிக்கோர். எனினும் ஏசுகிறார் நேறு !
ஆந்திரர் தமது உரிமையைப் பெற ரயிலை கவிழ்த்தனர். தபாலுக்குத் தீயிட்டனர்.
ஆமதாபாத்தில் கதர்சசட்டையை காந்தி குல்லாயைத் தீயிட்டனர். அந்த விதமான அநாகரிகம் வேண்டாம். அகில உலகில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நாகரிக முறையான கறுப்புக் கொடி காட்டுவது என்பதைச் செய்யவுமா வகையற்றுப் போனீர்கள் என்று இந்த வையகம் கேட்கும்.
தையலர் சிரிப்பர். பின் சந்ததியும் ஏசும். எனவே எல்லோரும் வாருங்கள். ஏசிப்பேசும் நேரு பண்டிதருக்கு காட்டுவோம் கருப்புக் கொடி.”
எப்படி இருக்கிறது தீர்மானம் ? அனல் பறக்கவில்லை ?
கனிமொழி குற்றப் பத்திரிக்கை நகலை வாங்க டெல்லி செல்கிறார் என்றதும், உங்கள் கட்சி எம்பிக்கள் அத்தனை பேரையும் டெல்லிக்கு அனுப்பினீர்கள். உங்கள் உள்துறைச் செயலாளரை அனுப்பினீர்கள். அனைவரையும், மகளோடு ஆதரவாக இருக்கச் செய்தீர்கள். உங்களால் தகத்தகாய கதிரவன் என்று அழைக்கப் பட்ட ராசாவை சிபிஐ விசாரணைக்கு அனுப்பிய போது, ஏன் உங்கள் கட்சி எம்பிக்களை அனுப்பவில்லை ? தலித் இனத்தின் தன்னிகரில்லாத தலைவனல்லவா ராசா ? பொட்டல் காட்டில் பூத்துக் குலுங்கிய பூச்செடி இல்லையா ராசா ?
rajacourt_20110210
இதையெல்லாம் விட நீங்கள் செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், உங்கள் மகளுக்காக ராம் ஜெத்மலானி செய்த வாதம். கைது செய்யப் பட்டதனாலேயே ஒருவர் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக ஆகாது என்று பேசி விட்டு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஜெத்மலானியை தவறு செய்தவர் ராசாதான், கனிமொழிக்கு பொறுப்பில்லை என்று பேச வைத்தீர்கள் ? இதை விட ஒரு மனிதனின் முதுகில் குத்த முடியுமா ? ராசா யாருக்காக கொள்ளையடித்தார் கருணாநிதி ? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்காகவும் தானே ? ஆயிரக்கணக்கான கோடிகளை உங்களுக்காக ராசா கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுத்த போது ராசா இனித்தாரா ? ராசா அப்ரூவராக மாறினால், தள்ளு வண்டியோடு நீங்களும் திஹார் செல்ல வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை ?
dmk6
இனி உங்கள் வாயில் இருந்து வரும் ஒரு வார்தையைக் கூட யாரும் நம்பப் போவதில்லை கருணாநிதி. இனியாவது எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்துங்கள். உங்கள் பொய்யுரைகளும், புனை சுருட்டும் இனியும் நம்பப் படாது. உங்களுக்கு மான உணர்ச்சியெல்லாம் இல்லை என்பது நன்கு தெரியும். “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார் பெரியார். உங்களை நீங்கள் மனிதனாக கருதினால், உடனடியாக பதவி விலகுங்கள். உங்களுக்குப் பிறகு திமுகவில் தலைவர் பொறுப்புக்கு வருவதற்கு ஒருவருக்குக் கூட தகுதி இருப்பதாக சவுக்கு கருதவில்லை. தகுதி இல்லை என்று சொல்வது, திறமை இல்லை என்பதற்காக அல்ல ? நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து, உங்கள் மகளுக்கு பாதுகாவலனாக டெல்லி சென்று காத்துக் கிடப்பவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமையான திருச்சி சிவா உட்பட.
அதனால், உங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் ஊழல் கறை படியாமல் இருப்பது, கனிமொழியின் மகன் ஆதித்யா தான். அதனால் ஆதித்யாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைப்பதை பற்றி சிந்தியுங்கள்.
27cm7
அய்யன் வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று நினைவிருக்கிறதா ?
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
நீங்கள் எப்போதா இறந்து விட்டீர்கள் கருணாநிதி. இனி இறப்பதற்கு வேலையில்லை.


Tuesday, May 17, 2011

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”


மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!


அசுர பலத்தில் வந்திருக்கும் அ.தி.மு.க ஆட்சி எப்படியிருக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஜெயாவின் இரண்டு இருண்ட காலத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.


கருணாநிதி குடும்பத்தின் ஏகபோக தொழில்களை ஓரளவுக்கு கப்பம் வாங்கி அனுமதித்துவிட்டு ஜெயா சசி கும்பலின் ஏகபோகம் ஆரம்பிக்கும். மறுகாலனியாக்கத்தின் கொள்ளையில் பொறுக்கி தின்பதற்கு தற்போது வாய்ப்பு அதிகமென்பதால் இவர்கள் சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவம் வெகுவேகமாக கல்லா கட்டுவார்கள். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலில்லாத வறட்சியை ஐந்து மாதங்களில் கூட தீர்த்துக் கொள்வார்கள்.
மீண்டும் போலீசின் நேரடி அதிகார ஆட்சி வரும். ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், ஈழ ஆதரவு முதலியவையெல்லாம் மிரட்டல் கண்காணிப்பில் வைக்கப்படும். இதற்கு மேல் ஜெயலலிதா, சசிகலா என்ன விரும்புகிறார்கள், எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த திகில் நிறைந்த அடக்குமுறைகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.


அரசு ஊழியர், தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களது நலனுக்காக போராடுவது குதிரைக் கொம்பாக மாற்றப்படும். மீறி போராடினால் கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டுகள் மாறினாலும் ஜெயலலிதா மாறமாட்டார். இதற்க்கு வைகோவே மிக பெரிய உதாரணம். இது போக துக்ளக் சோ போன்ற குருநாதர்கள் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தின் வேலைத்திட்டங்களெல்லாம் மறைமுகமாகவோ,நேரடியாகவோ கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் பல உண்டு.


இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.
’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?


ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக் கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!



இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?


இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?


சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.


ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?
’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.


போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.
நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.


நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார்.

போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

- பாரதி தம்பி

Saturday, May 14, 2011

தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமை



Kumudham .. reports;





rtt
மிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுவதாக’ சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளன.

இம் மாதம் ஒன்றாம் தேதி.. மதுரை மாவட்டம் வில்லூர் கிராமத்தில் ‘ஏன் இந்தத் தெருவுக்குள் வந்தாய்’ என தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் திட்டியதாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.பி. கார் மீது கிராமத்தினர் கல்வீச்சு நடத்தி கலவரம் செய்தனர்.

துப்பாக்கிக்சூடு நடத்தி கலவரத்தை போலீஸார் கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கலவரம் தொடர்பாக சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் இம்மாதம் முதல் வாரத்தில் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு ள்ளேன். தலித்துகளுக்கு குறிப்பிட்ட தெருக்களில் சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டத் தடை, ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடத் தடை, தெருக்களில் நடந்து செல்லத் தடை என ப ல்வேறு நிர்ப்பந்தங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது.

இது சட்டவிரோதமாகும். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீட்டுத் தரப்படும்...’’ எனக் கூறி தீண்டாமை இருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, தீண்டாமை குறித்து ஆய்வு செய்துள்ள ‘சாட்சியம்’ என்ற அமைப்பு தனது விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பியிருக்கிறது. இது குறித்து சாட்சியம் அமைப்பின் திட்ட இயக்குநர் திலகத்திடம் பேசினோம்...

‘‘மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களில் 213 கிராமங்களில் தீண்டாமை குறித்து விரிவாக ஆய்வு செய்தோம்.

104 கிராமங்களிலுள்ள டீக்கடைகளில் ‘இரட்டை டம்ளர்’ முறை நடைமுறையில் உள்ளது. 211 கிராமங்களில் வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடு உள்ளது. இதில் கோயி லுக்குள் தலித்துகள் செல்ல அனுமதி மறுப்பு, தலித் குடியிருப்பு வழியாக தேர், சப்பரம் வர மறுப்பு என பல பாகுபாடுகளைப் பார்க்க முடிந்தது.

இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் அறங்காவலர் குழுவில் கூட, தலித்துகளுக்கு அனுமதியில்லை.

கோயில்கள் தொடர்பாக பல்வேறுவிதமான மோதல்களும் கலவரங்களும் ஏற்பட்டாலும் இருபது சம்பவங்களுக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்ப ட்டி செங்கமடையார் கோயிலில் உரிமை கேட்டதற்காக தலித் இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.

அவரை சிரட்டையில் தண்ணீர் குடிக்க நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்கள். சங்கரன்கோவில் அருகில் உள்ள செந்தட்டி கிராம த்தில் கோயில் பிரச்னை தொடர்பாக நடந்த மோதலில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இருவர் கொலை செய்யப்பட்டனர். இது போன்ற நிறைய சம்பவங்களைச் சொல் லமுடியும்.
இதுதவிர, 213 கிராமங்களில் 70 கிராமங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பாகுபாடு உள்ளது. அங்கு பொருட்கள் வாங்க மற்றவர்களுடன் தலித்துகள் வரிசையில் நிற்க முடியாத நிலை இருக்கிறது.

தலித்துகளுக்கும், மற்றவர்களுக்கும் தனித்தனி நேரங்களில் பொருட்கள் விநியோகம், தரமான பொருட்கள் சாதி இந்துக்களுக்கும் தரமற்ற பொருட்கள் தலித்துகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

208 கிராமங்களில் மயானம் தொடர்பான பாகுபாடுகள் நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் மயானங்கள் சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. சில கிராமங்களிலுள்ள மயானங்களில் சாதிகள் பெயர்களில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

142 கிராமங்களிலுள்ள சலூன் கடைகளில் தலித்துகள் முடி வெட்ட முடியாது. 13 கிராமங்களில் தலித்துகளுக்கு முடி வெட்டுவதற்கு தனி கத்தரிக்கோல், சீப்பு பயன்படுத்து கிறார்கள்.

25 கிராமங்களிலுள்ள சலூன்களில் தலித்துகள் நாற்காலிகளில் உட்கார முடியாது. 111 கிராமங்களிலுள்ள சாவடி, சமுதாயக்கூடம், கலையரங்கம், மந்தை ஆகியவற்றில் தலித்துகள் உட்கார முடியாது.



சுத்தமாக துணி உடுத்துவதும் பல கிராமங்களில் தலித்துகளுக்கு சாத்தியமில்லை. 145 கிராமங்களில் உள்ள பொது நீர்நிலைகளில் தலித்துகள் தண்ணீர் பிடிக்க முடியாது. பொதுக்குளத்தை தலித்துகள் பயன்படுத்த இருபது கிராமங்களில் அனுமதி இல்லை. மெஜாரிட்டியான கிராமங்களில் சாதி இந்துக்களுக்கும், தலித்துகளுக்கும் தனித்தனியே நீர் நிலைகள் உள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரசு மருத்துவமனையிலும் பாகுபாடு காட்டப்படுவதை 33 கிராமங்களில் அறிய முடிந்தது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர்களும் இந்த தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.

‘‘தன்னை மருத்துவமனை ஊழியர்கள் ‘குப்பை டாக்டர்’ என கேலி செய்தனர்’’ என தலித் வகுப்பைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியபோது அதிர்ச்சி அடைந்தோம். இதற்கும் மேலாக நாற்பத்தைந்து தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் மீதும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுத்து மூலமாக எங்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதேபோல, பள்ளி வகுப்பறைகளிலும், சத்துணவு வழங்குவதிலும், பள்ளி விழாக்களிலும், கிராம விழாக்களிலும், பொதுக்கழிப்பறைகளிலும், பேருந்துப் பயணத்திலும் கடு மையான பாகுபாடு உள்ளதை ஆய்வின் மூலம் அறியமுடிந்தது’’ என்றார்.

தலித் மக்கள் இன்னும் தீண்டாமைத் தீயில் வெந்து கொண்டு இருக்கிறார்கள். இதனை வேடிக்கை பார்க்கிறது அரசு. பதவியும், பணமும் தலித் தலைவர்களின் வசமாகியி ருக்கிறது. இவர்களும் தலித் மக்களை விட்டு தள்ளியே நிற்பதுதான் வேதனையான விஷயம்.

BSP - growing very fast in Tamilnadu.

This union members called Mr.E.Pa.Jeevankumar, State Gen.Secretary, BSP, TN for the public meeting was arranged at the Main Gate of BHEL. More than 700 people participate.

On May 23rd,Mr.Pramodkureel MP will deliver the lecture at BHEL -Thiruchi at 4pm. During this function may SC/ST/OBC and Religious Minority people expected to join in our BSP Movement.




BSP has been growing very fast in Tamilnadu. Mr.Pramodkureel MP took incharge as a Co-ordinator in both Tamilnadu and Kerela, with his sacrifice and dedicated work, people of SC/ST/OBC and Religious Minority are joining in our party.

Tuesday, May 10, 2011