Thursday, August 13, 2009

இந்தியப் பொலிசார் சட்டவிரோத கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்

இந்திய பொலிசார் மீது குற்றச்சாட்டு
"இந்தியப் பொலிசார் சட்டவிரோத கொலைகள் மற்றும் ஏதேச்சாதிகார கைதுகள் உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்" -
ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு

குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தியப் பொலிசார் சித்திரவதை, தாக்குதல் மற்றும் வேறு வழிவகைகளைப் பயன்படுத்துவதாக இந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய பொலிஸ் படை பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பின்னர் சிறிதளவே மாற்றம் பெற்றுள்ளதாகவும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கே களங்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இந்திய அரசாங்கம் பொலிஸ் படையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

"திருந்தாத குற்றவாளிகளை கையாள வேறு வழியில்லை" - தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர்

கொடூரமான குற்றவாளிகள் மீது கருணை காட்ட முடியாது என்கிறார் தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர் டீ.ஜீ.பி வால்ட்டர் தேவாரம்..

No comments: