Thursday, March 4, 2010

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

First Published : 22 Dec 2009 02:30:39 AM IST


தூத்துக்குடி, டிச. 21: தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என, மள்ளர் இலக்கிய கழகம்- மள்ளர் நாடு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் சுப. அண்ணாமலை தூத்துக்குடியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது. படிப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள வர்களை மேம்படுத்த சாதிவாரியாக கணக்கெடுப்பது அவசியம். தேவேந்திரகுல சமுதாய மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக் கடன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதில், மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏப்ரல் 25ஆம் தேதி மதுரையில் உலக தேவேந்திரகுல வேளாளர்கள் மாநாடு மற்றும் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து அரசியல், வேலைவாய்ப்புகளில் பின்தங்கி இருக்கும் தேவேந்திரகுல சமுதாய மக்களின் கல்வி, பொருளாதார நிலை மேம்பட தேவேந்திரகுல வேளாளர் நலவாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றார் அவர். பேட்டியின்போது மாநில செய்தித் தொடர்பாளர் அ.வே. ரத்தின மாணிக்கம், மாவட்டச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments: