Saturday, July 20, 2013

சாதியை மாற்றியது யார் ?

டாக்டர் கலைஞரா ? - உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.,ஆ?
சாதியை மாற்றியது யார் ?
போலிக் குல உயர்வுக்காக சாதியின் இழிவை மறைக்க இசைவேளாளர்களாக தம்மை மாற்றிக் கொண்ட அருந்ததியர்கள்
“இசை வேளாளர்கள் தெலுங்குப் படையெடுப்பின்போது ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் அல்லது ஆந்திராவில் இருந்து வந்த நடனக் குழுவினர். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வரும் வரை இம்மரபுப் பெண்கள் கோயில்களில் தேவரடியராகப் பணிபுரிந்து வந்ததுடன் பரத்தையர்த் தொழிலும், கலைத் தொழிலும் நடத்தி வந்தனர்” – பக்கம் 50, வோளாளர்கள் யார்? – இரா. தேவ ஆசிர்வாதம்.
3.8.2010 அன்று சன் தொலைக்காட்சி காட்டிய நிஜம் நிகழ்ச்சியில் ஆந்திராவில் தாழ்த்தப்பட்டவர்கள் மாலா, மாதிகா என்ற வேறுபட்ட இருபிரிவினர் உள்ளதாயும், மாலா அரிசனங்கள் என்றும், மாதிகா ஆதி அருந்ததியர் என்றும் ஒளிபரப்பப்பட்டது. ஆதி அருந்தியர் மட்டுமே கோயில்களுக்குக் கன்னிப் பெண்களை மாத்தம்மா என்ற பெயரில் தானம் செய்து அல்லது பொட்டுக்கட்டி அல்லது தேவரடியார்களாக்கி தொன்றுதொட்டு பெண்களை பரத்தையர்த் தொழிலுக்கும், நடனக் கலைத் தொழிலுக்கும் உட்படுத்தி வருகின்றனர் என்ற தெளிவான கருத்துக்கள் சாட்சியாக ஆதாரங்களுடன் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
மேற்படி இரண்டு கருத்துக்களின் உண்மையிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த அருந்ததியர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்தில் தம் சாதிப் பெயரை இசைவேளாளர் என மாற்றிக் கொண்டது தெளிவு.
எனவே ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனம் தமிழகம் வந்தபின் தம் சாதிப் பெயரை மாற்றி உயர்சாதி ஆக்கிக் கொண்டு மிகவும் பின்தங்கிய சாதியினரின் சலுகையை சில நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பது சட்டப்படி குற்றமல்லவா?
ஒரு இனம் தம் மீது திணிக்கப்பட்ட இழிவைத் துடைத்தெறிய முயல்வது பாராட்டப்பட வேண்டிய உயர்ந்த கொள்கை! தமிழகத்தில் இந்து மத்தின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்பட்ட இழிவைத் துடைத்தெறிய கிறித்தவ மதத்திற்கு மாறியதும் இது போலத்தான் – என்பதை நீதிமான்கள் உணரவேண்டும்.
தமது, பூர்வீக அருந்ததியர் சாதி எவருக்கும் தெரியக்கூடாது என்று தானோ கலைஞர் கருணாநிதி அவர்கள் தம் குடும்பத்தாருக்கு அடுத்த சாதிகளில் திருமணம் செய்து வைக்கிறார்? தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு மேம்பாட்டுக்காகவா? அல்லது இரத்தப்பாசத்திற்காகவா? தான் பூர்வீகத்தில் தமிழன் இல்லை என்பதால்தான் – கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களை அழித்து ஒழிக்கும் ராஜதந்திர அரசியலை தமிழகத்தில் தன் தி.மு.க. ஆட்சியின் மூலம் நடத்தினாரோ!
திரு உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., கிறித்தவ மத்தில் இருந்து முறைப்படி இந்துவாக மாறியுள்ள நிலையில், பொய்ச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்தார் என்று மேற்படி இந்திய அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்தது சரியா? இது குற்றம் என்றால் மேற்படி ஆந்திராவில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சாதியான அருந்ததியர்கள் கடந்த காலத்தில் தமிழகத்தில் குடியேறி தம் சாதியாகிய ஆதி அருந்ததியர் சாதியை மறைத்து மிகவும் பிற்பட்ட/உயர்ந்த சாதியாக்கி சட்டத்திற்கு விரோதமாக பொய்யாக இசைவேளாளர்கள் என்று சான்றிதழ் பெற்று மத்திய, மாநில அரசுப் பணிகளில், இவரும், இவருடைய சாதிக்காரர்களும் ஆண்டாண்டு காலமாய் அமர்ந்து சலுகைகளை அனுபவித்தது பற்றி இந்திய அரசு விசாரணைக் கமிஷன் அமைத்து குற்ற நடவடிக்கை எடுக்குமா?
தமிழில் பேசியே, தமிழர்களை மயக்கியே, தமிழை வியாபாரம் செய்தே தமிழக அரசைப் பிடித்த அயல் மொழிக்காரர்கள், தம் இனம் வாழவே தமிழகத்தில் சட்டம் இயற்றி தமிழர்களை சட்டத்தால் ஏதிலியாக்குகிறார்கள் என்றால் மறுக்க முடியுமா? அல்லது தமிழர்கள் அவர்களால் படும்பாட்டை மறக்கத்தான் முடியுமா?
 
https://www.facebook.com/ajax/sharer/?s=99&appid=2309869772&p%5B0%5D=100003186353243&p%5B1%5D=411970638919144&share_source_type=unknown
 
https://www.facebook.com/devendrakula.vellalar
 

6 comments:

Arunthathiyar Varalaru said...

தமிழர்கள் இந்த மண்ணுக்கு வருவதற்கு முன்னரே சக்கியரம் மள்ளரும் கோளையரும் இந்த பூயில் வாழ்ந்த பூர்வ குடிகள் என்பது வரலாறு. புத்தர் உயிர் நீத்த பிறகு அவர் அஸ்திக்கு உரிமை கொண்டாடிய மள்ளர்கள் சாக்கிய வம்சா வழியினர் என்பது மள்ளர்களின் வரலாறு. பூர்வகுடிகளாம் மள்ளர்கள் பேசியது பாலி மொழியே. களபறையர்களை களபாளர்கள் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆச்சுத களபாளன் (கலபள்ளன்) கலப்பரையர்களின் மிக சிறந்த அரசன் என களபறையர் வரலாறு கூறுகிறது. மள்ளர்கள் தமிழர்களாக ஆவதற்கு முன்னர் களபறையர் அல்லது களபாளர்களாக இருந்ததே உண்மை வரலாறு....

நன்றி:-

http://sakyagroup.blogspot.in/2012/09/blog-post_6430.html

Arunthathiyar Varalaru said...

அருந்ததியர்களை வந்தேரி எனவும் அவர்கள் நாயக்கருடன் அடிமை சேவகம் செய்ய தமிழகம் வந்ததாகவும் கூறும் மூடர்களே பாரதேசிகளே இங்கே என் வரலாறை பதிவிட்டால் யார் வந்தேரி என தெரிந்துவிடும்.
நாங்கள் ஆதிதமிழர்கள் தகடூரை ஆண்ட அதியமான் நெடுஞ்செழியன் அஞ்சு வம்சாவழி நாங்கள் அதியர் இனம் அதியர் குலத்து மன்னரை மா+அதியர் என அழைத்தனர். அந்த மா+அதியர்= மாதியர் மாதாரி மாதிகா ஆனது அதியர் இனம் தான் அருந்ததியர் ஆனது ஆட்சிகாலம் கிபி857 திருவண்ணாமலை அருந்ததியரை பற்றிய கல்வெட்டு கிபி1258
முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்த மாமன்னர் ஒண்டிவீரன் கிபி1755
முதல் சாதி ஒழிப்பு போராளி மதுரைவீரன் கிபி 1500
சேலம் மாவட்டம் ஓமலூரில் சக்கிலிச்சி ஏரியில் உள்ள கல்வெட்டில் சக்கிலிச்சி ஏரி எனவும் பாசன வசதிக்காக சக்கிலியர்களால் உருவாக்கபட்டது என குறிப்பிடபட்டுள்ளது தோற்றுவிக்கபட்ட காலம் 3 ம் நூற்றாண்டு

நாயக்கர்கள் தமிழகம் வந்தது 14 ம் நூற்றாண்டு
நாயக்கர்கள் ஆட்சிகாலம் கிபி1529 TO 1736....

Arunthathiyar Varalaru said...

இந்த மண்ணில் தோன்றிய ஆதிதமிழர்களே அருந்ததியர்கள் என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
தலித்கலை எனும் புத்தகத்தில் வீரசக்கிலிச்சி முதல் தற்கொலை போராளி வீரத்தாய்குயிலி எனவும் உடையாள் படை தலைவி எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
அப்படியானால் இந்த அருந்ததிய மக்கள் ஏன் தெலுங்கு பேசுகிறார்கள். என கேட்கும் அறிவாளிகளே!
அருந்ததியர்கள்(மாதியர்) தமிழ் நாட்டின் வட கோடியிலுள்ளது தொண்டைவடுகநாடு... இதின் ஒரு பகுதி அருவா நாடு...இந்த நாடுதான் தெலுங்கு நாட்டின் தென் எல்லையில் முதலில் இருக்கும் நாடு. ..ஆகவே அருவா நாட்டு மக்களை அரவ வாள்ளு என்றும் அங்கு பேசப்பட்ட மொழியை அரவ பாஷா என்றும் தெலுங்கர்கள் குறிப்பிட்டனர்...இன்றும் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவ்வாறே அழைக்கின்றனர்.
போருக்கு முன் வீரர்கள் சேர்ந்து சத்தமிடுவதை போர் அரவம் என்பர்

Arunthathiyar Varalaru said...

முந்தையது அடுத்தது
விருப்பம்
கருத்து
குறியிடு
பகிர்
ஆதித்தமிழன் சக்கிலியன்
அருந்ததியர்களான ஆதித்தமிழர்கள்;

மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாம் எம் தமிழ் ,ஆம் எம் தமிழினத்திற்கான வீரமும் விவேகமும் கொண்ட எம் அருந்ததியர்களான ஆதித் தமிழர்கள் மட்டுமே இந்த வரலாற்று பெயருக்கு சொந்த காரர்கள் .தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பால் ஊட்டியும் அவர்க்ளுக்கு தூய தமிழ் பெயரும் ,பெயரில் வீரன் என்ற பெயர்களும் அந்த பெயருக்கு ஏற்றவாறு வீரனாக இந்த மண்ணில் திகழ்ந்து பல மாபெரும் வீரர்களையும், பல போர் உத்திகளான கொரில்லா (மாவீரன் ஒன்டிவீரன்) ,தற்கொலை தாக்குதல் (வீரத்தாய் குயிலி) போன்ற தாக்குதல்களையும்,(மரபு வழி போர்முறை (கந்தன்,முத்தன் பகடை இன்னும் பல) தாக்குதல்களும், தலைமை பண்புகளை தங்கள் உயிரினும் மேலாக மதித்து வந்துள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேரான எதிரிகளயும் சந்தித்து சில சமயம் தோல்வியையும் பல சமயம் வெற்றிகளயும் கண்டு எந்த கால கட்டத்திலும் எந்த சூழ்நிலையிலும் பார்ப்பனிய சிந்தனைக்கு தம் சந்ததியினர் ஏற்றுக்கொள்ளாத படியும் சமுத்துவத்தையும் மனித மாண்பிற்க்கும் தாயாக திகழும் பௌத்த வழியில் தங்களை ஈடுபடுத்தியும்வருகினறனர்.இவர்களே இந்த மண்ணில் தோன்றிய ஆதித்தமிழராக திகழந்து தங்கள் வாழ்க்கை நடைமுறையையும் அதனூடவே பயனிக்க வைத்து ஆதித்தமிழர்களாகவும் தமிழகத்து புலிகளாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

மேலும் அண்ணல் அம்பேத்கர் பல உலக நடைமுறையை ஆராய்ந்து இந்திய கண்டம் முழுவதும் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மட்டுமே அதன்பின்னரே இந்தியாவில் மற்ற மொழிகள் மற்ற மாநிலங்களில் தமிழிலிருந்து மற்ற மொழிகளை தோற்றுவித்து கொண்டனர் என்ற வரலாற்று ஆராய்ச்சியின் உண்மைக்கினங்க இன்று இம்மண்ணின் ஆதித்தமிழர்களான அருந்ததியர்கள் இன்று திகழ்கின்ற இந்திய மொழிகள் கன்னடம், மலையாளம்,தெலுங்கு,துல்லு போன்ற பல மொழிகளை கற்று தேர்ந்தவர்களாக உள்ளனர்.
ஆனால் இவரகள் எக்காலத்திலும் அந்த மொழிகளை எழுத்து வடிவத்தில் கள்ளாமல் இருந்துள்ளனர்.காரணம் மனிதர்கள் தங்கள் தாய்மொழிகளில் மட்டுமே எழுத்து இலக்கனம் போன்றவற்றை கற்றவர்களாக திகழ்வது வழக்கம் போல் இவர்களும் தங்கள் தாய்மொழியான தமிழை மட்டும் கற்று அதன் பண்பாடுகள் மற்றும் அனைத்து விதத்திலும் தேர்நதவர்களாக திகழ்கின்றனர்.இவர்கள் கூடுதல் மொழியான மற்ற மொழிகள் தங்கள் சமூகத்திற்கு மட்டும் புரிந்து கொள்ளும்படியும் அந்த மொழிகளை தங்கள் தாய் மொழியாக கொண்டவரகளுக்கு புரியாத வண்ணமும் பேசி வந்துள்ளனர்.இதுவே ஆதித்தமிழர்களை தமிழகம் என்ற குறுகிய வட்டத்தில் இல்லாமல் எம் அருந்ததியர்களான ஆதித்தமிழர் மக்களின் தனிச்சிறப்பு.மேலும தமிழர்களின பாரமபரிய வழக்கமான நடுகள் முறையையை இன்று வரை பின்பற்றுபவர்கள் அருந்ததியரகளும் ஈழத்தமிழர்கள் மட்டுமே,தமிழர்களின் இசையான பறை இசையை வாசித்து அதன் உயிரை இன்று வரை காப்பாற்றி வருகின்றனர்.விவசாயத்திற்கு தேவையான பறி,ஏற்றம் செய்வதற்கு கமலை போன்றவைகளை செய்து விவசாயத்தில் சிறநது விளஙகி வநதுளளனர்.

அதே போலவே ஒரு குறுகிய சிநதனையோடல்லாமல் உலகத்தின் முழுவதும் பரவி இருக்கின்ற வானத்தின் நிறத்தையும் வையகத்தில் சூழ்ந்து இருக்கின்ற கடலின் நிறத்தையும் தேர்ந்தெடுத்து அந்த நிற்த்தின் கொள்கையாக எல்லா அடக்குமுறைகளுக்கும் எதிராக மீறி எழுவது இயல்பான மனிதப் பண்பு கொண்டவர்களாகவும். வரலாறு நெடுகிலும் சாதியை எதிர்த்தவர்களாகவும், அதற்காக தமது விலை மதிப்பில்லா உயிரை ஈந்தவர்களாகவும், சாதி ஒழிப்பை மானுட விடுதலைக்கான தத்துவமாக மாற்றியவராகர்களாகவும் சாதிய விடுதலை என்பது, உள்ளார்ந்த பொருளில் அனைத்து இந்திய சமூக மக்களுக்கான விடுதலைதான் என்ற அண்ணல் அம்பேத்கர் கூற்றுபடி தங்கள் கொள்கைகளை வகுத்து திகழ்கின்றனர்.

நீல நிறம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை குறிப்பது போல. தங்களது அரசியல் அமைப்பிற்குத் தேர்ந்தெடுத்த கொடியை நீல நிறத்தில்அமைத்து வருகின்றனர். நீலம் உலகின் ஒரே கூரையான வானத்தைக் குறிக்கிறது. உலக சகோதரத்துவத்தின் குறியீடாக இதை எடுத்துச் சென்று வரலாற்றில் திடடமிட்டு ஏமாற்றபட்ட அருந்ததியர்களின் சமூக விடுதலையை அருந்ததியர்களான ஆதித்தமிழர்களின் விடுதலையை விரைவில் இவ்வுலகிற்கு சமர்பிப்பார்கள் எம் ஆதித்தமிழர்கள்.

"ஆதிததமிழரின் விடுதலையே அனைவருக்கும் விடுதலை"
'நன்றி:-
- ஆதித்தமிழன் சக்கிலியன்
https://m.facebook.com/677137142391854/photos/a.677302715708630.1073741828.677137142391854/683382365100665/?type=1&refid=17

S Athiappan said...

அப்படின்னா கலைஞர் கருணாநிதி தமிழர் இல்லையா? அதுதான் ''திராவிடன'' பிடிச்சுக்கிட்டு தமிழன்னு சொல்லி பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்காறா?

Unknown said...

மள்ளர்கள் பாண்டிய மன்னர்களின் பரம்பரை என்கிறார்கள்...

ஆனால் மூவேந்தர்களையும் சிறைப்பிடித்தது களப்பரர்கள் என்கிறது வரலாறு...

மள்ளர்கள் பாண்டியரா? களப்பரரா?