Tuesday, September 9, 2014

காங்கிரஸ் -பார்வர்டு பிளாக் - திராவிட கட்சிகள்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காக முத்துராமலிங்க தேவர் "பார்வர்டு பிளாக் " கட்சியை தமிழகத்தில் வளர்த்த போது உண்மையில் ஆரம்பத்தில் அவருக்கு மறவர்களை விட முதுகுளத்தூர் சுற்று வட்டார குடும்பமார்களே (பள்ளர்கள்) ஆதரவாக இருந்தனர்...
அன்றைய கால கட்டத்தில் மறவர்கள் எல்லாம் சேதுபதி ஜமீன் பின்னாலேயே இருந்தனர்!!!
பின் நாட்களில் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து முத்துராமலிங்க தேவர் நடத்திய தீவீர போராட்டங்கள் காரணமாக மறவர்களும், கள்ளர்களும் பார்வார்டு பிளாக் கட்சியை நோக்கி நகர்ந்து முத்துராமலிங்க தேவர் தலைமையில் ஒருங்கினைந்தாலும்,
அப்போதும் அக்கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள் முதுகுளத்தூர் பகுதி குடும்பமார்களே!!!
முத்துராமலிங்க தேவரின் வலதுகரமாக இருந்த சோலை குடும்பன் மற்றும் வேலு குடும்பன் பெயரை சொன்னாலே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சி நடுங்கும் அளவிற்கு,
மறவர்களும், பள்ளர்களும் ஒருங்கினைந்தே பார்வார்டு பிளாக் கட்சியை வளர்த்துள்ளனர் என்பதே வரலாற்று உண்மை!!!
காங்கிரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்,
பார்வர்டு பிளாக் கட்சியிர் செய்த அனைத்து அடக்குமுறைகளுக்காக அரசு போட்ட வழக்குகள் அனைத்திலும்,
முத்துராமலிங்க தேவருக்கு அடுத்த பெயர்களாக சோலை குடும்பன் பெயரோ அல்லது வேலு குடும்பன் பெயரோ தான் உள்ளது!!!
அதாவது,
அன்றைக்கு பார்வர்டு பிளாக் கட்சிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் இருந்த அனைவரையும் சோலை குடும்பனும், வேலு குடும்பனுமே அச்சுருத்தி அடக்கியுள்ளனர்!!!
இவர்களின் அச்சுருத்தலுக்கு அன்றைக்கு பார்ப்பான் தொடங்கி, முதலியார், சேர்வை, கோனார், உள்ளிட்டவர்களோடு,
அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த பள்ளர்களும் சேர்த்தே பாதிக்கபட்டுள்ளர்!!!
இந்த நிலையில் இப்படியே விட்டால் தென் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அரசியலே செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் தான்,
பூவைசிய இந்துரகுல சங்கத்தை நடத்திக்கொண்டிருந்த ஐயா பேரையூர் பெருமாள் பீட்டருடன் சேர்ந்து சமூக வேலைகள் செய்து கொண்டிருந்த இளைஞர் இமானுவேல் சேகரன் அவர்களின் துடிப்பான வீரத்தையும், சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டதின் தீவிரத்தையும் பார்த்த காங்கிரஸ் தலைவர்களான காமராஜரும், கக்கனும்,
பார்வர்டு பிளாக் கட்சியின் ஆதிக்கத்தை முடக்குவதற்கு சரியான நபர் மாவீரன் இமானுவேல் சேகரனே என்ற முடிவுடன் அவரை காங்கிரஸ் கட்சியல் சேர்க்கின்றனர்!!!
அதன் பிறகே,
அன்றைக்கு பார்வர்டு பிளாக் கட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்நத நாடார், கோனார், பள்ளர்,பிள்ளைமார் உள்ளிட்ட அனைவருக்கும் ஆதராவாக களம் காண தொடங்கினார் மாவீரன் இமானுவேல் சேகரன்!!!
இந்த முரண்பாடு வளர்ந்தே பின் நாட்களில் மாவீரனின் கொலையில் கொண்டுபோய் விட,
அதுவரை காங்கிரஸ் கட்சி Vs பார்வர்டு பிளாக் கட்சிக்குமான பிரச்சனையாக இருந்தது,
பள்ளர் Vs மறவர் மோதலாக வளர்ந்து,
இன்றைக்கு இந்தளவிற்கு ஒட்டுமொத்த தமிழித்திற்கும் பொரும் கேடாக உருமாறியுள்ளது தோழர்களே!!!
இரண்டு கட்சிகளுக்கான சண்டை எப்படி இரண்டு சமூகங்களுக்கான சிக்கலாக மாறியது???
அப்படி திட்டமிட்டு மாற்றியவர்கள் யார்???
அதில் ஆதாயமடைந்தவர்கள் யார் யார்???
அதன் பிறகு சாதி ஒழிப்பு, சமூகநீதி என்று அரசியல் பேசி அதிகாரத்திற்கு வந்தவர்கள் ஏன் இப்பிரச்சனையை தீர்க்கவில்லை???
முத்துராமலிங்க சாதி வெறியர் என்று, இமானுவேல் சேகரனை சாதி ஒழிப்பு போராளி என்று திராவிட கருத்தியலை வைத்து அதிகாரத்தை பிடித்த திராவிட கட்சிகள்,
முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு மட்டும் அபரிமிதமான முக்கியத்தும் கொடுப்பதும்,
இமானுவேல் சேகரன் விழாவை மட்டும் புறக்கனிப்பதின் காரணம் என்ன???
சாதி ஒழிப்பு அரசியல் பேசுபவர்கள்,
ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய ஐயா இமானுவேல் சேகரனின் வீரவணக்க நாளுக்கு அல்லவா முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்???
ஜெயலலிதாவை விடுங்கள்,
இந்த கருணாநிதி, வைகே உள்ளிட்ட திராவிட சாதி ஒழிப்பு புரட்சியாளர்கள் எல்லாம் ஏன் இதுவரை மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த போகவில்லை???
ஆனால்,
இவர்கள் பார்வையில் சாதி வெறியரான முத்துராமலிங்க தேவர் விழாவிற்கு ஆண்டுதோறும் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் செல்வதிற்காகன பின்னனி என்ன???
பார்வர்டு கட்சியில் தன் சொந்த சாதியினரான சோலை குடும்பனே நின்றாலும்,
ஆதிக்கம் என்பது யார் செய்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைத்து சமுக மக்களுக்காகவும் தன் சொந்த சாதியினரையே எதிர்த்து களமாடிய மாவீரனை,
ஒட்டுமொத்த தமிழர்களின் புரட்சிக் குறியீடாக பார்க்காமல்,
அவரை தலித் தலைவர் என்று ஏதோ வந்தேறிகளின் தலைவர் என்று இந்த திராவிட, தலித்திய திருடர்கள் காட்ட முயல்வது ஏன்???
இதற்கு பின்னனியில் உள்ள சதிகளும், மோசடிகளுக்கும் யார் காரணம்???
இது போன்றா என்னற்ற கேள்விகளுக்கான பதில்களை காரண காரியத்தோடு கண்டுனர்வதில் தான்,
பள்ளர்களுக்கும், மறவர்களுக்குமான சிக்கலை மட்டுமல்ல,
ஒட்டுமொத்த தமிழினத்தின் சிக்கலையும் தீர்க்கும் வழிமுறைகளும், அதற்கான தீர்வுகளும்....
அதைவிடுத்து ஆளும் அதிகாரவர்க்கம் நாமக்குள் சண்டை மூட்டிவிடுவது கூட தெரியாமல்,
இங்கே ஆளும்வர்க்கத்தின் கையாட்களான போலி புரட்சியாளகளின் சூழ்ச்சி புரியாமல்,
பள்ளர்களும் மறவர்களும் மோதிக்கொண்டே இருந்தால்,
தமிழினத்தின் அழிவை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது தோழர்களே!!!
முக்குலத்து நண்பர்களுக்கு நான் விடுக்கும் பகிரங்க அழைப்பு யாதெனில்,
நம் தாத்தன் பாட்டன் காலத்தில் நாம் எந்த காரணத்திற்காக சண்டையிட்டு இருந்தாலும்,
அதில் யார் பக்கம் நியாயம் இருந்திருந்தாலும்,
அதையெல்லாம் மறந்துவிட்டு இனியாவது தமிழர்களாக இனைவோம் என்பதே!!!
இல்லையென்றால்,
இந்த திராவிட வடுகர்கள் நம் பேரப்பிள்ளைகளை கூட நிம்மதியாக வாழவிட மாட்டார்கள்!!!
சிந்தித்து செயல்பட்டால் நம் அடுத்த தலைமுறை இம் மண்ணை ஆளும்!!!
இல்லையென்றால் ஒட்டுமொத்த தமிழினமும் வீழும்!!!

No comments: