Thursday, September 3, 2009

தேவேந்திரகுல இளைஞர் பேரவையின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

ஆதிதிராவிடர் பட்டியல்: தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வலியுறுத்தல் - www.dinamani.com

First Published : 18 Jun 2009 10:02:58 AM IST -


தாராபுரம், ஜூன் 16: ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தேவேந்திரகுல இளைஞர் பேரவையின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தாராபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவராக எஸ்.முருகேஷ், செயலராக ஆர்.ஹரிதாஸ், துணைத் தலைவராக இ.ரமேஷ், துணைச் செயலராக எஸ்.கருப்புசாமி, பொருளாளராக அர்ஜூனன், இளைஞரணி அமைப்பாளராக ப.ரங்கநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேவேந்திரகுல வேளாளர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து நீக்கி, தேவேந்திரகுல வேளாளர் என்று தனி ஜாதிச்சான்றிதழ் வழங்குதல், தாராபுரத்தில் தேவேந்திரர்களுக்குச் சொந்தமான மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமித்தல், மருத்துவமனையைச் சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: