Thursday, November 6, 2008

Uthapuram - A village without men of minorities

எழுமலை : மதுரை மாவட்டம் எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இ.கோட்டைப்பட்டி சுரேஷ்(25) கழுத்து, முதுகு பகுதியில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார்.

கூடுதல் பாதுகாப்பு: எழுமலையில், கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரன் நேற்று கூறியதாவது: "எழுமலை உத்தப்புரம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி ஏற்படுத்துவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மதுரை, தேனி, சிவகங்கை எஸ்.பி.,க்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

எழுமலை, செல்லாய்புரம், ஆத்தங்கரைப்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, ஏ.கோட்டைப்பட்டி ஆகிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.* மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்படிருந்த சுரேஷ் உடலை நேற்று இரவு 7 மணிக்கு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் பார்த்தார். மாலை 6.30 மணி முதல் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source: Texts selectively extracted from dinamalar.com

No comments: